YouTube

Wikipedia

Search results

Recent

Categories

Ad Banner

Blogroll

About

Search This Blog

JavaScript Free Code
HTML Free Code
JavaScript Free Code
JavaScript Free Code
JavaScript Free Code

Recent Comments

Recent Post

BTemplates.com

About

Text Widget



Labels

About

Type your text here JavaScript Free Code

Blogroll

Pages - Menu

Weekly post

Wednesday, 10 May 2017

அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்… குறைவான உப்பு இதயத்திற்கு ஆபத்தா?

   அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவுகள்…
குறைவான உப்பு இதயத்திற்கு 
ஆபத்தா ?



உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று கூறுவர். அந்த உப்பின் அளவு குறைந்தாலும் ஆபத்து தான் அதிகமானாலும் ஆபத்து தான். இந்திய வம்சாவளி விஞ்ஞானியின் தலைமையிலான குழு எச்சரித்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு நாம் குறிபிட்டளவு உப்பு சேர்க்கத் தவறினால் அது நமது இதயத்துக்கு ஆபத்தை விளைவிக்குமாம்.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தற்போதைய வழிகாட்டுதலின் படி ஒரு மனிதர் ஒரு நாளைக்கு சராசரியாக 5 கிராமிற்கு குறையாமல் உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும்.

எனினும், கனடா ஆராய்ச்சியாளர்கள் அந்த அளவு போதுமானது இல்லை என்றும், அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஆனால், மதிநுட்பமானது அதிக அளவு உப்பு உடலுக்கு மிகப் பெரிய கேடு விளைவிக்கும் என்று கருதுகிறது.

இதயம்

சலிம் யூசுஃப் என்னும் கனடா மெக்மாஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் கூறியதாவது, ” குறைவான உப்பு எடுத்துக்கொள்வது உடலுக்குத் தீங்கையே விளைவிக்கும். ஒரு நாளைக்கு 3 கிராமுக்கு குறைவாக சோடியம் எடுத்துக் கொண்டால் இதய செயலிழப்பு, திடீர் மரணம், மாரடைப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது”, இவ்வாறு கூறியிருக்கிறார்.

யூசுஃப் கூறுகிறார், உப்பின் அளவை குறைப்பதால் உடலின் உள்ள இயற்கையான சமநிலைகளும் குறைந்துக் கொண்டே வருகின்றது என்று.

குறைந்த உப்பு

குறைந்த அளவு உப்பை உட்கொள்ளுவதால் ஏற்படும் ஆபத்துக்களைப் பற்றி உலக வர்த்தக மையம், உயர் இரத்த அழுத்த ஐரோப்பிய சமூகம் மற்றும் ஐரோப்பிய பொது சுகாதார சங்கத்தின் கூட்டு செயற்பாட்டுக் குழுவின் மூலம் ஐரோப்பிய இதய இதழில் வெளியான ஒரு அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு

மேலும் இந்த அறிக்கையில், ” நாள் ஒன்றுக்கு 2.3 கிராம் சோடியமுக்கும் குறைவாக எடுத்துக் கொள்ளுவது என்பது சாத்தியம் இல்லை. மேலும் இது நல்லது மற்றும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை” என்றும் கூறப்பட்டுள்ளது.

அளவு

இதற்கு மாறாக யூசுஃப் இதைப் பற்றி விரிவாக கூறியது என்னவென்றால், பெரியவர்கள் ஒரு நாளைக்கு 7.5 கிராமில் இருந்து 12.5 கிராம் வரை உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இது 3 முதல் 5 கிராம் சொடியமிற்கு சமம் என்றும் விவரித்துள்ளார்.

சரியான அளவில்

எனவே, உப்பினை குறைவாகவோ அல்லது கூடுதலாகவோ எடுத்துக்கொள்ளாமல் சரியான போதுமான அளவில் மட்டும் எடுத்துக் கொண்டு உடல் ஆரோக்கியத்தோடு பல்லாண்டு வாழ்வோம்



Writing by Goldenvimal ♥♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்