YouTube

Wikipedia

Search results

Recent

Categories

Ad Banner

Blogroll

About

Search This Blog

JavaScript Free Code
HTML Free Code
JavaScript Free Code
JavaScript Free Code
JavaScript Free Code

Recent Comments

Recent Post

BTemplates.com

About

Text Widget



Labels

About

Type your text here JavaScript Free Code

Blogroll

Pages - Menu

Weekly post

Sunday, 17 November 2019

இலக்கியம் பாலுணர்ச்சியாகிவிட கூடாது

                                      Sri...

  இலக்கியம் பாலுணர்ச்சியாகிவிட கூடாது 


 ஆனால்
   பாலுணர்ச்சி இலக்கியமாகலாம்.!!



     அழகே...
நீ ஒரு அக்சய பாத்திரம்
    எடுக்க எடுக்க குறையவில்லை 
உன்னிடம் உள்ள "உன்"


  பசி வந்துவிட்டால் ருசி தேவையில்லை,
காமம் வந்துவிட்டால் படுக்கை தேவையில்லை,
மயக்கம்,
காதல் மயக்கம்,
காதலில் குழைந்த காம மயக்கம்,
ஆண்டுகள் பலவாய்த் தேக்கிவைத்திருந்த
ஆசைகள் மடை திறந்து கொண்டன,
எல்லாமே மறந்து போயின இருவருக்கும்,
அது அந்திவேளை என்பது மறந்துபோனது,
அவர்கள் இருப்பது திறந்தவெளியின் மேல்தளம் என்பது மறந்துபோனது,
ஔிந்து கொண்ட நிலா
எப்போது வேண்டுமானாலும் தங்களை எட்டிப்பார்க்கலாம் என்பது மறந்து போனது,
நட்சத்திரங்கள் தங்களைப் பார்த்து கண்ணடிக்கின்றன
என்பது மறந்துபோனது,


அவனுக்கு ஆடவன் என்பது மறந்துபோனது,
அவளுக்கு மங்கை என்பது மறந்துபோனது,
விட்டுப்பிடிக்க வேண்டும் என்பது
அவனுக்கு மறந்துபோனது,
வெட்கப்பட வேண்டும் என்பது
அவளுக்கு மறந்துபோனது,
மேகப்போர்வையை இழுத்தெரிந்துவிட்டு முழு நிலவைக்காணத் துடிக்கும் காற்றைப்போல,
அவளை மூடியிருக்கும் ஆடைகளை
அவளுக்கே தெரியாமல் அகற்றிவிட அவன் ஆசைப்பட்டான்,
உறங்கும் குழந்தைக்கு தெரியாமல் அதன் நகம் வெட்டுகிற தாயைப் போல ,
மோகத்தின் உச்சத்தில்
முனங்கிக்கிடந்த அவளுக்கு தெரியாமல்,
அந்த அழகுக்கோட்டையை முற்றுகையிட்டான் அவன்,
அவள் ஆடை என்கிற அகழியைக்
 கைப்பற்றினான்,
பெண்மையின் முழுமை பார்த்த பிரமிப்பில்,
இமைப்பதற்கும், மூச்சுவிடுவதற்கும் இடைவேளை விட்டான்,,,

என்ன ?
  இது என்ன ?
இது தான் பெண்மையா ?

இந்த பூமியில் இதுவரை சூரியனும் பார்த்திறாத சுந்தரப் பிரதேசத்தை
நான் பார்க்கிறேனா ?

இது தான் இந்த அடியேனுக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசா ?

இது தான் எந்தன் ஆண்மையின்
அரசு கட்டிலா?

இது என்ன ?
 தந்தத்தை இழைத்து
தங்கத்தை மெழுகிய மஞ்சமா?

இது என்ன ?
மாங்கனிகளை உண்டு
வளர்ந்த தேன்கனியா ?

ராஜ விருந்தில் எதை உண்பதென்று தெரியாமல் தவிக்கும்
பிச்சைக்காரனைப் போல,
இன்னது செய்வதென்று தெரியாமல்
மன்னவன் தவித்தான்,
மேலே நட்சத்திரங்கள் துடித்துக்கொண்டிருந்தன,
கீழே கட்டில் வெடிந்துக்கொண்டிருந்தன,
கட்டிலின் மேல் இரு உயிர்கள் தவித்துக்கொண்டிருந்தன,

எழு !
 என் உயிரின் பாதியே எழு!
இனி எந்த இரவுக்கும்,
என் வாழ்வுக்கும் நீயே துணை !!!
என் ஜீவ நதியில் நீ
உயிர் வரை நனை !

அவன் வளைக்கத் துடித்தான் ;
அவள் வளைந்து கொடுத்தாள் ;

ஓ!
 இங்கு இன்பமே இடையூறு தான் ,
இடையூறுகளும் இன்பம் தான் ,
பிறகும் அந்த தேடல் தொடங்கியது,,,

மூச்சு முட்ட முட்ட -
வேர்வை சொட்ட சொட்ட -
கண்கள் செருக செருக -
கைகள் இருக இருக -
உடல்கள் குலுங்க குலுங்க -
உயிர் பிதுங்க பிதுங்க -

அது கட்டிலா தரையா
என்பது மறந்துபோக,
அது இரவா பகலா
என்பது தொலைந்துபோக,
அந்த தேடல் தொடர்ந்து கொண்டிருந்தது,
அது முடிவற்ற தேடல்,
மனிதர்கள் அன்றுமுதல் இன்றுவரை தேடிக்கொண்டிருக்கும்,

"தீராத தேடல்"

இந்த பூமியைத் துழாவித் துழாவி இத்தனைக் காலமாய்ச் சூரியன் எதை தேடுகிறதோ,
அதைப்போலவே இதுவும் ஓர் அழியாத் தேடல்,

இத்தனைக் கோடி ஆண்டுகள் தேடியும்,
இன்னும் அது ஏன் கிடைக்கவில்லை தெரியுமா ?

இங்கே மனிதர்கள் தொலைத்து விடுவது தங்களைத்தான் ,

அப்படி
தொலைந்து போவதும்
அவர்களுக்குள்ளே தான்,

இல்லாத ஒன்றைத் தொலைத்து விட்டு,
தொலைக்காத ஒன்றைத் தேடுவதால்,
இந்த தேடல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது,

தன் மேகப் போர்வையை மெல்ல விலக்கி
நிலா எட்டிப்பார்த்தது,

தேடித்தேடியே தங்களைத் தொலைத்துவிட்ட களைப்பில்,

இரண்டு ஜீவன்கள் அசைவற்றுக்கிடந்தன,,,


பாத்திரத்தில் இத்தனை புதையல்களா?
💗
your content here

மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,